Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நவ்யாவின் சுய சரிதை!
பிரபல தமிழ், மலையாள நடிகை நவ்யா நாயர். இஷ்டம் என்ற மலையாளப்படம் மூலம் 2001-ல் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் தமிழ் படம் அழகிய தீயே. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் இவரால் ஏற்பட்ட தகராறு இயக்குநர் தங்கர் பச்சானை நடிகைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது.
குடும்பமே ஆசிரியர் பணியிலிருப்பதால், நவ்யாவும் நடிப்புடன் படிப்பைத் தொடர்ந்து வந்தார். சமீபத்தில் எம்பிஏ முடித்தார்.
இதுவரை தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நவ்யா அந்த அனுபவங்கள் மற்றும் சொந்த வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்தப் புத்தக வெளியீட்டு ஒரு பெரிய பில்டப் கொடுக்க நினைத்து, "விரைவில் ஒரு பரபரப்பான தகவலை வெளியிடவிருக்கிறேன்" என்று நவ்யா அறிவித்திருந்தார். எத்தனை முறை கேட்டும் அதற்குமேல் சொல்ல மறுத்துவிட்டார்.
'சரி மார்க்கெட் டல்லடித்து விட்ட நடிகைதானே... திருமணம் பற்றித்தான் சொல்வார்' என்ற அனுமானத்தில் பத்திரிகையில் பரபரப்பாக செய்தி வெளியிட, உடனே அலறியடித்துக் கொண்டு அவரே எல்லோருக்கும் போன் செய்து, விஷயம் இதுதான் என்று, இந்த சுய சரிதை மேட்டரைக் கூறியுள்ளார்.