தீன்மார்... பிரபாஸுடன் த்ரிஷாவின் நள்ளிரவு விருந்து!

சமீபத்தில் த்ரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸும் பங்கேற்ற நள்ளிரவு விருந்து பற்றிய ஸ்பெஷல் கவரேஜாகப் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.
த்ரிஷா நடித்துள்ள தீன் மார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. இதில் கலந்து கொண்ட த்ரிஷா, அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விட்டாராம்.
அடுத்த சில நிமிடங்களில், விழாவுக்கு வந்திருந்த பிரபாஸும் காணாமல் போய்விட்டாராம். இந்த இருவரையும் ஒரு கூட்டமே தேடிக் கொண்டிருந்ததாம். இருவரின் செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டு விட்டிருந்ததால், என்ன நடந்திருக்கும் என்பதை சுலபமாக யூகித்துக் கொண்டனர்.
பின்னர், படத்தின் தயாரிப்பாளரிடம் விசாரித்ததில், "த்ரிஷாவும் பிரபாஸும் நெருங்கிய நண்பர்கள். ஹைதராபாத் போன்ற நகரில், இந்த மாதிரி சூழலில் நெருங்கிய நண்பர்களான த்ரிஷாவும் பிரபாஸும் எங்கே போயிருக்கப் போகிறார்கள். நிச்சயம் நள்ளிரவுப் பார்ட்டியாகத்தான் இருக்கும். அப்படியே போனாலும், அது இங்கு சகஜம்தான்", என்றாராம் ஒரே போடாக!


Click it and Unblock the Notifications











