Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பருத்தி வீரன் மாதிரி படம் அமையலையே! - ப்ரியாமணி ஏக்கம்
"பாவாடை - தாவணியே இனி எனக்கு வேண்டாம். பருத்தி வீரன் முத்தழகி கெட்டப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன்," என்று பேட்டியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ப்ரியாமணி இப்போது இருக்குமிடமே தெரியவில்லை!
சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பதை தெரிவிக்க தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டி மேல் பேட்டியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு வந்திருந்த நிருபர்கள் சிலரிடம் தனக்கு நல்ல வாய்ப்பு இல்லையே என்ற புலம்பலைத் தொடர்ந்தார்.
அவர் கூறுகையில், "பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசிய விருது பெற்று தந்தது. அதேநேரம் முத்தழகு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை விட விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்பினேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட வேடங்களே எனக்கு கிடைப்பதில்லை. பருத்தி வீரன் மாதிரி படமும் அமையவில்லை. இதுவருத்தத்தை அளிக்கிறது.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வெவ்வேறு விதங்களில் நடித்து வருகிறேன்.
தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களின் தன்மை மாறுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் பருத்தி வீரன் மாதிரி கனமான படத்தில் நடிக்க இப்போதும் தயார்", என்றார்.