Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐபிஎல் பிராண்ட் அம்பாஸிடர்: விலகினார் கத்ரீனா கைப்!
இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக தன்னால் ஐபிஎல் -4 சுற்றுப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல்லின் ஆரம்ப கட்டத்திலிருந்தே விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூர் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார் கத்ரீனா. கடந்த ஆண்டு இவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் அவர் விளம்பரத் தூதுவராக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் யாஷ் சோப்ராவின் 'மேரே பிரதர் கி துல்ஹன்' எனும் புதிய படத்தில் அவர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதால், இந்த விளம்பர தூதர் பணியை மேற்கொள்ள முடியவில்லையாம். எனவே இந்த விளம்பர தூதர் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
"எந்த வேலையாக இருந்தாலும் 100 சதவீத ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் படப்பிடிப்பு, ஐபிஎல் என இரண்டையும் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. ஐபிஎல், சினிமா இரண்டுமே முக்கியம். இரண்டுமே சிறப்பாக வரவேண்டும். எனவேதான் எனது விளம்பரத் தூதர் பணியை இன்னும் சிறப்பாக வேறு யாராவது செய்யட்டும் என விலகியுள்ளேன்," என்கிறார் கத்ரீனா.
புரொபஷனல்!