மறுபடியும் மேகா நாயர்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேகா நாயரை தரிசிக்கும் பாக்கியம் தமிழ்த் திரையுலக ரசிகப் பெருமக்களுக்குக் கிடைக்கப் போகிறது.
காதலிச்சி பார் என்ற படத்தின் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார் மேகா நாயர். கேரளாவிலிருந்து வந்த இந்த நெடு நெடு அழகி, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெரிய ரவுண்டுக்கு வர முடியாத அளவுக்கு அவரது நேரம் அமைந்து போனது.
இதனால் தமிழில் காணாமல் போனோர் பட்டியலில் இணைந்தார் மேகா. பசுபதி ராசக்காபாளையம் படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து கவர்ச்சிகரமான ரோல்களே தேடி வந்ததால் அப்செட்டாகிப் போனார் மேகா. இருந்தாலும் லேசுபாசான கவர்ச்சிக்கும் அவர் தயாராகவே இருந்தார். இருந்தாலும் வாய்ப்புகள்தான் சரிவர இல்லை.
இந்தநிலையில் தற்போது விகாஸ் என்ற புதுமுக நாயகனுக்கு ஜோடியாக காதலிச்சி பார் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மேகா.
இந்தப் படத்தில் முத்துக்காளை, காதல் சுகுமார் ஆகியோருக்கு முக்கியப் பாத்திரங்களாம். அப்படியானால் படம் எந்த அளவுக்கு வெயிட்டானது என்பதை உணரலாம். விஜயபாலன் என்பவர் இயக்குகிறார்.
படத்தின் கதை என்ன என்று விசாரித்தபோது, லட்சியத்தை நோக்கி செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுகிறது. கடைசியில் எது வெல்கிறது என்று பதில் கிடைத்தது.
இதே டயலாக்கை ரொம்பவாட்டி கேட்டது போல இருக்கிறதல்லவா. இருந்தாலும் வித்தியாசமாக தர முயற்சித்திருக்கிறாராம் இயக்குநர்.
அப்புறம் இன்னொரு விஷயம், வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் புகழ் கானா உலகநாதனும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் பாடியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











