twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்போனில் ரசிகர்கள் தொந்தரவா...? - மறுக்கும் ப்ரியாமணி

    By Shankar
    |

    Priyamani
    செல்போனில் ரசிகர்கள் தொல்லை கொடுப்பதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் ப்ரியாமணி.

    முத்தழகி ப்ரியாமணிக்கு தினமும் நிறைய ரசிகர்கள் செல்போனில் ஐ லவ்யூ சொல்கிறார்கள் என்றும், சிலர் ஆர்வ மிகுதியில் செக்ஸியாக ஜோக்குகள் அனுப்புகிறார்கள், ன்னும் சிலரோ ஆபாச படங்கள், எஸ்எம்எஸ்களை அனுப்பி தொந்தரவு செய்வதாகவும் செய்தி வெளியானது.

    இந்த தொந்தரவில் இருந்து மீள முடியாமல் பிரியாமணி தவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதனால் அதிக நேரம் போனை அணைத்துவைத்துவிடுகிறாராம் ப்ரியாமணி. இரவு நேரங்களிலும் போன் செய்து டார்ச்சர் செய்தார்களாம். தொல்லை கொடுத்தவர்களை போலீசார் பிடித்து விட்டனர் என்றும் தற்போது பிரியா மணி அந்த தொந்தரவிலிருந்து இருந்து மீண்டு விட்டார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதையெல்லாம் மறுத்துவிட்டார் ப்ரியாமணி.

    இதுபற்றி பிரியாமணி கூறுகையில், "நான் பழைய செல்போன் நம்பரைத்தான் பயன்படுத்துகிறேன். நண்பர்களுடன் பேசுவதையும் நிறுத்தவில்லை. படப்பிடிப்புக்கு வழக்கமாக செல்கிறேன். என்னை சுற்றி உள்ள நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும் பேசியும் தொல்லைகள் செய்வதாக செய்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை. கற்பனையாக அந்த செய்தி பரப்பப்பட்டு உள்ளது. நான் தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்," என்றார் அவர்.

    English summary
    Actress Priyamani denied media reports on unwanted SMS's and anonymous calls from her fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X