சூர்யாவுடன் பிரியாமணி!

சமூகத்தில் நடக்கும் அதிரடியான பல்வேறு நிஜ சம்பவங்களை படமாக்குவதில் கைதேர்ந்த ராம்கோபால் வர்மா தற்போது, ஆந்திராவில் கடப்பா பகுதியில் நடக்கும் அரசியல்-ரவுடியிசத்தை 'ரக்த சரித்ரா'வில் அம்பலமாக்க திட்டமிட்டுள்ளார்.
கடப்பா கொம்பன்களாக இருந்து பின்னாளில் அரசியல்வாதிகளாகி விட்ட பரிதாள ரவி மற்றும் மத்தெலசெரு சூரி ஆகியோர் இப்படத்தின் முக்கிய நாயகர்கள்.
இதில் பரிதாள ரவி வேடத்துக்கு விவேக் ஓபராயும், சூரி வேடத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளனர். சூரியின் மனைவி பானுமதி வேடத்தில் பிரியா மணி நடிக்கிறார்.
ஏற்கனவே தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து மணிரத்னம், ராம்கோபால் வர்மா போன்ற ஜாம்பாவான இயக்குனர்கள் படங்களாக நடித்து வருவது மற்ற நடிகைகள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications