Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சேர்ந்து ஜிம் போகும் ரன்பீர்-காத்ரீனா
சல்மான் கானின் பிடியிலிருந்து காத்ரீனா கைப் படிப்படியாக நழுவி வருவதாக கூறப்படுவதே பாலிவுட்டின் புது கிசுகிசு. சல்மானின் நிழலை விட்டு விலக விரும்புகிறார் காத்ரீனா, ரன்பீர் கபூர் மீது காதல் கொண்டுள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
போபாலில் ராஜ்நீதி படத்துக்காக முகாமிட்டுள்ள காத்ரீனா, சமீபத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து ரன்பீரை கட்டி அணைத்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ராஜ்நீதி படத்தில் காத்ரீனா, ரன்பீர் தவிர அர்ஜூன் ராம்பாலும் இருக்கிறார்.
படப்பிடிப்பு நேரம் போக மாலை நேரங்களில் இந்த மூவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனராம். மூன்று பேருமே ஒரு பிசிக்கல் டிரெய்னரை வைத்துள்ளதால், சேர்ந்தே மூன்று பேரும் ஜிம்முக்கு சென்று வருகிறார்களாம்.
மூன்று பேரும் ஒரே இடத்தில் உடற்பயிற்சி செய்தாலும் கூட ரன்பீரும், காத்ரீனாவும் மட்டும் நீண்ட நேரம் ஜிம்மில் இருப்பார்களாம். அர்ஜூன் சுருக்கமாக முடித்துக் கொண்டு போய் விடுவாராம்.
இதுவும் இப்போது பாலிவுட்டில் பரபரப்பான கிசுகிசுவாகி விட்டது.