ஜெயம் ரவி படத்திலிருந்து நயன் நீக்கப்பட்டது ஏன்?

தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார் ஜெயம் ராஜா.
இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஆனால் அவருக்கு முன் இந்தப் படத்தில் ஒப்பந்தமானவர் நயன்தாரா.
சம்பளமெல்லாம் பேசி முடிக்கும்போதுதான், பிரபு தேவாவுடன் அவருடைய ரகசிய திருமணம், தனிக்குடித்தனம், பஞ்சாயத்து போன்ற விவகாரங்கள் வெளியாகின. எனவே படம் முடியும் வரை உடனிருந்து ஒத்துழைப்பு தருவேன் என எழுதித் தரச் சொல்லிக் கேட்டாரக்களாம் நயன்தாராவிடம்.
அவரோ அதற்கு மறுத்துவிட, 'வேற நடிகையைப் பாப்போம்... கோடம்பாக்கத்துல நடிகைகளுக்கா பஞ்சம். நமக்கு கதைமேல நம்பிக்கையிருக்கு', என எடிட்டர் மோகன் தன் ஸ்டைலில் சொல்லிவிட, அதற்குப் பிறகே தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆக, இப்போதைக்கு நயனை அந்த 'ஆதவன்' மட்டும்தான் காப்பாத்தணும், தமிழில்!


Click it and Unblock the Notifications











