Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வாடா...சுந்தர்.சி-ஷெரில்
இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பாலிவுட்டின் கீதா பஸ்ரா. ஆனால் கதையைக் கேட்டுவிட்டுப் போன கீதா, பின்னர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டியே பார்க்கவில்லையாம். அதன்பிறகுதான் கேப்டனின் நாயகியை அவரது அனுமதியோடு பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.
முதல் படத்தில் கனடா நாட்டுப் போலீஸ் வேடத்தில் வந்து டொரண்டோ தெருக்களில் கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட ஷெரிலுக்கு இந்தப்படத்தின் கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.
வாடாவில் ஒரு விசேஷம்... அதில் இடம் பெறவிருக்கும் ரீமிக்ஸ் பாட்டு ஒன்று. வழக்கமாக இளையராஜாவின் பாடலை ரீமிக்ஸ் பண்ணும் சுந்தர், இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் என்னடி ராக்கம்மாவை உல்டா பண்ணச் சொல்லியிருக்கிறாராம்.
இந்தப் படம் குறித்து ஷெரில் கூறுகையில்,
கதை ரொம்ப யூத்புல்லா இருந்தது. இயக்குநர் வெங்கடேஷ் ஆக்ஷன் படங்களில் எக்ஸ்பர்ட். அதனால் அவர் படத்தில் என்னைப் போன்ற நாயகிகளின் பங்கு என்ன என்பதும் புரியும். என் மனம் விரும்பிய மாதிரி இளமையான, நடிக்க வாய்ப்புள்ள காட்சிகள் நிறைய. சுந்தர் படங்களைப் பார்த்திருக்கிறேன். நிச்சயம் வித்தியாசமான ஹீரோ அவர் என்கிறார்.
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!