கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம்

சிந்தனைகள் என்ற பெயரில் ஸ்ரீதேவி ஒரு ஓவியம் வரைந்துள்ளார். இது கிறிஸ்டி நிறுவனம் மூலம் ஏலத்திற்கு விடப்படுகிறது. மே 6ம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது. தொடக்க விலையாக 25,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போனி கூறுகையில், சிறு வயது முதலே ஓவியம் வரையும் பழக்கம் உடையவர் ஸ்ரீதேவி. நேரம் கிடைக்கும்போது வரைவார். கடந்த சில வருடங்களாக தான் வரைந்து வந்த ஓவியங்களை தனது சகோதரிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எங்களது குடும்ப நண்பர் சல்மான் கானுக்கும் கூட சில ஓவியங்களைக் கொடுத்துள்ளோம் என்றார்.
சில மாதஙகளில் மும்பையில் ஒரு கண்காட்சியை நடத்தவுள்ளாராம் ஸ்ரீதேவி. இதில் 30 ஓவியங்கள் இடம் பெறுமாம்.
1997ம் ஆண்டு போனியை மணந்த பின்னர் சினிமாவுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











