Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம்
சிந்தனைகள் என்ற பெயரில் ஸ்ரீதேவி ஒரு ஓவியம் வரைந்துள்ளார். இது கிறிஸ்டி நிறுவனம் மூலம் ஏலத்திற்கு விடப்படுகிறது. மே 6ம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது. தொடக்க விலையாக 25,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போனி கூறுகையில், சிறு வயது முதலே ஓவியம் வரையும் பழக்கம் உடையவர் ஸ்ரீதேவி. நேரம் கிடைக்கும்போது வரைவார். கடந்த சில வருடங்களாக தான் வரைந்து வந்த ஓவியங்களை தனது சகோதரிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எங்களது குடும்ப நண்பர் சல்மான் கானுக்கும் கூட சில ஓவியங்களைக் கொடுத்துள்ளோம் என்றார்.
சில மாதஙகளில் மும்பையில் ஒரு கண்காட்சியை நடத்தவுள்ளாராம் ஸ்ரீதேவி. இதில் 30 ஓவியங்கள் இடம் பெறுமாம்.
1997ம் ஆண்டு போனியை மணந்த பின்னர் சினிமாவுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.