Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரச்சனைகளில் இருந்து மீண்டு புது மனுஷியாக வநதுள்ளேன்: மல்லிகா
மல்லிகாவை நீண்ட நாட்களாக காணவில்லை. எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆள் என்ன ஆனார் என்று விசாரித்த போது மல்லிகா கூறிய காரணம்...
குடும்ப பிரச்சனையால் கடந்த ஒரு வருடமாக நான் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை. என் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு இருந்தது.
இப்பொழுது குடும்ப பிரச்னைகளிலிருந்து மீண்டு விட்டேன். பிரச்சனை என்றால் ஒன்றும் பெரியது எல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஏற்படுவது போன்று தான். அதை பற்றி விவரிக்க விரும்பவில்லை.
நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் சரியான வழிகாட்ட ஆள் இல்லாததால் பல தவறான படங்களில் நடித்தேன். எனது முயற்சிகளில் தோல்வியடைந்து துவண்டு போனேன். இப்போது சுதாரித்துக் கொண்டேன். அதனால் புது மல்லிகாவாக வந்துள்ளேன்.
அன்மையில் மாதவனுடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படபிடிப்பின் போது மாதவன் எனக்கு சினிமா சம்பந்தமாக அறிவுரை கூறினார். அது மிகவும் உதவியாக உள்ளது.
இப்போது மலையாளத்தில் லேடீஸ் ஒன்லி படத்தில் முகேஷ் ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் சந்தோஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இனி வரும் காலத்தில் நீங்கள் என்னை பல நல்ல படங்களில் பார்க்கலாம் என்றார் உற்சாகமாக.
மல்லிகை போல மல்லிகாவின் திரை வாழ்க்கையிலும் மணம் வீசட்டும்.