Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்?
ரஜினியின் அடுத்த படமான ஹராவில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால் இன்னும் அதுபற்றி எனக்கு முறையாக தகவல் வரவில்லை, என்றார் வித்யா பாலன்.
வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், எல்லா நாயகிகளுமே இவருடன் ஒரு முறை நடித்துவிட வேண்டும் என்று துடிப்பது, ரஜினியுடன் மட்டுமே!
அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் வித்யா பாலன்.
தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், இதுவரை அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ரஜினியின் சுல்தான் தி வாரியர் படம், ஹரா என்ற பெயர் மாற்றத்தோடு, அவதார் ஸ்டைலில் தயாராகிறது. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நிஜ ரஜினியுடன், அனிமேஷன் ரஜினியும் தோன்றுவது போல காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரஜினி 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இப்போது இயக்குபவர் கே எஸ் ரவிக்குமார்.
படத்தில் முதலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக வித்யா பாலனும் நடிப்பார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான். தமிழ் நான் நடிக்கும் முதல் படம் ரஜினியுடன் அமைந்தால், அதைவிட அதிர்ஷ்டம் எதுவுமில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது பெற்றோரும், நான் ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் எனக்கு முறையான அழைப்பு வரவில்லை.மீடியா செய்திகள்தான்... அழைப்பு வந்தால் அடுத்த நிமிடம் சென்னையில் இருப்பேன்", என்றார்.