Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் கொள்ளை
சென்னை: சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனைவைத்து ‘நானே என்னுள் இல்லை'என்ற திரைப்படத்தை இயக்கினார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ரெங்கவிலாஸ் என்ற நெடுந்தொடரிலும் நடித்தார் ஜெயசித்ரா.
நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார் ஜெயசித்ரா. அவரது வீட்டு வளாகத்தில் சிறிய அளவில் விநாயகர் கோவில் கட்டி அவர் வழிபட்டு வந்தார். கோவிலில் மூன்றரை அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இதற்கு 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் செய்து வைத்து இருந்தார்.
முக்கிய நாட்களின் போது விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மற்ற நாட்களில் மரப்பெட்டியில் பூட்டி வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. நித்ய பூஜை செய்வதற்காக தனியாக அர்ச்சகர் ஒருவரை நியமித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வெள்ளிக் கவசம் கடந்த 24ஆம்தேதி மாயமானது. அர்ச்சகர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜெயசித்ரா மானேஜர் கணேசன் நுங்கம்பாக்கம் போலீசில் இன்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன வெள்ளிக் கவசம் மதிப்பு ரூ.9 லட்சம் எனக் கூறப்படுகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்