Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்
மும்பையில் வசித்து வந்தவர் மீரா வாசுதேவன். கிரிக்கெட் தொடர்பான விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா நடிகையானார். தமிழில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு திடீரென விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் மீரா. அதேசமயம், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து சமரச மையத்திற்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று இருவருக்கும் நீதிபதி ராமலிங்கம் விவாகரத்து அளித்து உத்தரவிட்டார்.
தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதிர்பார்க்கவில்லை என்று மீரா கூறியதால் ஜீவனாம்சம் வழங்கும்படி விஷாலுக்கு கோர்ட் உத்தரவிடவில்லை.