Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் நாயகியான சுஹாசினி!
சுஹாசினி இப்போதெல்லாம் நடிப்பதில்லை. ஜெயா டிவியில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அது போக சமீபத்தில் வசனகர்த்தா என்ற புதிய அவதாரத்தையும் ராவணன் படம் மூலம் எடுத்தார்.
தற்போது தமிழ் சினிமாவில், கதை நாயகன், கதை நாயகி என்ற புதிய டிரெண்ட் பாப்புலராகியுள்ளது. அந்த வரிசையில் சுஹாசினியும் கதைநாயகியாகியுள்ளார்.
உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்ற படத்தில் கதையின் நாயகி சுஹாசினிதானாம். இளம் வயதில் விதவையாகும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், உணர்ச்சிப் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராயும் படமாம் இது.
இப்படத்தில் சுஹாசினியின் மகள் வேடத்தில் அர்ச்சனா நடித்துள்ளார். இவர் வேகம் படத்தின் நாயகியாவார்.
இப்படத்தை இயக்குபவர் நாகேந்திர குமார். இந்தப் படம் சுஹாசினிக்கு விருது பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நாகேந்திர குமார்.