Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'தடை' பயம்- விளக்கம் தந்த ஆசின்
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மீது கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்தின. தமிழ்ப் படங்களைத் திரையிட்ட தியேட்டர்களும் அடித்து நொறுக்கப்பட்ன.
அதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நடிகர்-நடிகைகள் திரளாக கலந்துகொண்டார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாத நடிகர்- நடிகைகளிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அதற்கு விளக்கம் அளித்து பெரும்பாலான நடிகர்- நடிகைகள் பதில் கடிதம் அனுப்பி விட்டார்கள். ஆனால், மும்பையில் முகாமிட்டு கஜினி' (இந்தி) படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஆசின் மட்டும் விளக்க கடிதம் அனுப்பாமல் இருந்தார். இதனால் அவருக்கு கோலிவுட்டில் தடை விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் ஆசின் ஓடி வந்து விளக்க கடிதம் தந்துள்ளார்.
அந்த கடிதத்தில் ஆசின் கூறியிருப்பதாவது:-
நான், நட்சத்திர தூதராக பொறுப்பேற்றிருந்த நிறுவனம் மும்பையில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ் திரையுலகமும், நடிகர் சங்கமும் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.