Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆசின் வீட்டு வேலைக்காரப் பெண் மாயம்
சென்னை தேனாம்பேட்டை கருணாநிதி காலனியை சேர்ந்தவர் நர்சம்மா என்கிற நகோமி. இவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகள் பியூலா (21) கடந்த 5 வருடங்களாக சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகை அசின் வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
வாரம் 3 முறை என்னை வந்து பார்த்து விட்டுச் செல்வார். சில நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. அசின் வீட்டில் சென்று கேட்டபோது நடிகை அசினுடன் மும்பைக்கு சென்று இருப்பதாகவும் ஒருவாரத்தில் வந்து விடுவார் என்றும் கூறினார்கள். ஒருவாரம் கழித்து சென்று மீண்டும் கேட்டபோது சரியாக பதில் ஏதும் சொல்லவில்லை.
எனது மகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஆசினிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் தீர்மானித்து அவரது வீட்டை அணுகினர். ஆனால் ஆசின் வீட்டில் இல்லை. ஆசின் மும்பையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொலைபேசி மூலமும் ஆசினைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆசினிடம் விசாரணை நடத்த அவரை தொடர்பு கொள்ள போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.