Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுங்க வரி-விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிபாஷா பாசு!
உரிய வரியைச் செலுத்திய பிறகு அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.
லண்டனிலிருந்து மும்பை வந்த பிபாஷா பாசு, வரி செலுத்தாத சில பொருள்களை வாங்கி வந்தார். ஆனால் இவற்றுக்கு வரி கட்டாமல் செல்ல முயன்றபோது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் கொண்டு வந்திருந்த பொருள்களின் மதிப்பு ரூ 65000. இதற்கான சுங்கத் தீர்வை ரூ 13000.
இதைத் தொடர்ந்து, அவர் வரி கட்ட உடனடியாக ஒப்புக் கொண்டதோடு, அந்தப் பொருள்களுக்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.
எனவே வரியை அவர் செலுத்தியதும், விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து பிபாஷா கூறுகையில், "இது ஒரு வழக்கமான செக்கப்தான். நான் மிக சாதாரண பொருள்களைத்தான் வாங்கிவந்திருந்தேன். அவற்றுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பது தெரியாது. ஆனால் அதிகாரிகள் சொன்னதும் நான் அதை செலுத்திவிட்டேன்," என்றார்.
ஏற்கெனவே பிரபல நடிகை மின்னிஷா லம்பா வரி கட்டாத ரூ 55 லட்சம் வைர நகைகளுடன் வந்திறங்கியபோது பிடிபட்டது நினைவிருக்கலாம்.