Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மீனாளுக்கு புதுப் படம்!
தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணியாக வந்து போனார் மீனாள். சின்ன கேரக்டர் என்றாலும் கூட மீனாளும் பேசப்பட்டார். இதையடுத்து அவரைத் தேடி பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வந்தவையெல்லாம் கிளாமர் வாய்ப்புகள்தான்.
இதனால் புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் யோசித்து வந்த மீனாள், வேறு வழியில்லாமல் ஒரு படத்தில் நல்ல கிளாமரோடு கூடிய வேடத்தை ஏற்று நடித்தார். படம் என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.
இந்த நிலையில் மீனாளுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. கந்தன் குமரன் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் மீனாள் முக்கிய வேடத்தில் தலை காட்டுகிறாராம்.
இளைஞர்களை மையமாகக் கொண்ட படமாம் இது. ஆனால் நல்ல கருத்துடன் படத்ைத எடுக்கவிருக்கிறார்களாம். மீனாளின் கேரக்டரும் படத்தில் பேசப்படுமாம்.
படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ரதீஷ், அவருக்கு ஜோடி ரூபஸ்ரீ. இருவருமே புதுமுகங்கள்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பை தொடங்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.