'பிக் பாஸ்' ஷில்பா!

கலர்ஸ் என்ற பெயரில் புதிய பொழுதுபோக்கு சேனல் ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. இந்த சேனலில், பிக் பாஸ் 2 என்கிற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஷில்பா ஷெட்டி தொகுத்து வழங்கவுள்ளார்.
டிவி எப்போது ஒளிபரப்பை தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 13 போட்டியாளர்கள் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் பெயர்கள், டிவி தொடங்கப்படும்போது அறிவிக்கப்படும்.
படப்பிடிப்பு முழுவதும் லோனாவாலா பகுதியில் நடைபெறும். 3 மாதங்களுக்கு இந்த ரியாலிட்டி ஷோ இடம் பெறும்.
இந்த நிகழ்ச்சியின் முதலாவது பாகம் சோனி டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பானது. அதை நடிகர் அர்ஷ்த் வர்சி ஹோஸ்ட் ஆக இருந்து தொகுத்து அளித்தார். தற்போது ஷில்பா அந்த இடத்திற்கு வருகிறார்.
இது லண்டன் டிவியில் ஒளிபரப்பான பிக் பிரதர் நிகழ்ச்சியைப் போன்றதுதான். பிக் பிரதர் என பெயரிடப்பட்ட அந்த நிகழச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுதான் ஷில்பா 'பிக் பாஸ்' ஆனார் என்பது நினைவிருக்கலாம். இப்போது தேசி கலர் பூசி இந்தியாவுக்கு கலர்ஸ் டிவி மூலம் வருகிறது இந்த ரியாலிட்டி ஷோ. அதை ஷில்பா தொகுத்து அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











