Don't Miss!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நயனதாரா இடத்தில் திரிஷா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடர்களாக விஜய்யும், நயனதாராவும் நியமிக்கப்பட்டனர். சென்னையில் நடந்த அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்து கொண்டனர்.
ஆனால் அதன் பின்னர் நயனதாரா சென்னை அணி தொடர்பான நிகழ்ச்சிகளில் விருப்பம் காட்டாமல் இருந்து வந்தார். மேலும், சென்னையில் நடந்த சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விஜய் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தார். ஆனால் நயனதாரா வரவில்லை.
இந்த நிலையில் நேற்று நயனதாராவை அதிரடியாக பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்து சென்னை அணியின் நிர்வாகம் நீக்கி விட்டது. தற்போது அந்த இடத்தில் திரிஷாவை புக் செய்துள்ளனராம்.
இதுகுறித்து சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே நயனதாராவுக்கு இதில் ஆர்வம் இல்லை. அணியின் அறிமுக விழாவின்போது கூட அவர் சுரத்தே இல்லாமல்தான் கலந்து கொண்டார். எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த அவரே உற்சாகம் இல்லாமல்தான் காணப்பட்டார்.
உடல் நலம் சரியில்லை, அதனால் வர முடியவில்லை என்று கூறுவது நம்பும்படி இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட, 2 மணி நேரத்திற்குள் அவரால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடிந்தபோது, ஏன் இங்கு மட்டும் வர முடியவில்லை.
நயனதாரா தனது பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். அவர் அதை செய்யவில்லை. எனவேதான் நீக்க வேண்டியதாகி விட்டது.
வேலை பார்ப்பதற்குத்தான் சம்பளம் தருவார்கள். அவர் வேலையே பார்க்கவில்லை. எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ. 40 லட்சத்தை திரும்பத் தருமாறு கேட்போம்.
நயனதாராவுக்குப் பதில் திரிஷாவை புக் செய்துள்ளோம். இதுகுறித்து சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்றார் அவர்.
நயனதாரா நீக்கப்பட்ட அதே வேகத்தில் திரிஷாவை புக் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.