Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காவ்யா மிரண்டால் கிளாமர்!
சித்திக்கின் முதல் இரு படங்களான பிரண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா இரண்டுமே சூப்பர் ஹிட். இரு படங்களிலும் காமெடி கலகலப்பாக இருந்தது. அதேபோல மூன்றாவது படமான சாது மிரண்டால் படத்திலும் காமெடிதான் கலக்கலாக வந்திருக்கிறதாம்.
காவ்யா மாதவன் இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். நாயகனாக நடித்திருப்பவர் பிரசன்னா.
5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் காவ்யா தமிழுக்கு வருகிறார். தீபக் தேவ் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார். சித்திக் மலையாளத்தில் இயக்கிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது. அந்தத் தெலுங்குப் படம் இதுவரை ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் காவ்யா கிளாமராக நடித்துள்ளாராம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது காவ்யா பேசுகையில், தமிழில் தனி நாயகியாக நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன். இப்படத்தில் அது நிறைவேறியுள்ளது.
இப்படத்தில் எனது கேரக்டரை அனுபவித்து செய்தேன். இது எனக்கு தமிழில் நல்ல பிரேக்கைத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
முதல் முறையாக இப்படத்தில் நான் கிளாமராக நடித்துள்ளேன். இப்படம் வெற்றி பெற்றால் கிளாமர் கலந்து தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
குடும்பக் கதையுடன் கூடிய இப்படத்தில் காமெடி படம் நெடுகிலும் வருவதாக சித்திக் கூறியுள்ளார்.