நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை

பாலிவுட் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது கை நிறைய, பை நிறைய பல்வேறு பொருட்களை அள்ளி வருகிறார்கள். ஆனால் அதற்குண்டான சுங்க வரியை மட்டும் மறக்காமல் செலுத்துவதில்லை.
இதனால் சமீப காலமாக பாலிவுட் கலைஞர்களை பிடித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது சுங்கத்துறை. பிபாஷா பாசு சமீபத்தில் இதுபோல பிடிபட்டார். இந்த நிலையில் இன்று அனுஷ்கா சர்மாவைப் பிடித்து விசாரித்துள்ளனர்.
டோரன்டோவில் நடந்த இஃபா விழாவுக்காக போயிருந்த அனுஷ்கா, திரும்பி வந்தபோது பல்வேறு பொருட்களுடன் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அதற்கான சுங்க வரியை அவர் செலுத்தவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர் கொண்டு வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Click it and Unblock the Notifications











