twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை

    By Sudha
    |

    Anushka Sharma
    மும்பை : விமான நிலையத்திற்கு வந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மா கொண்டு வந்திருந்த பொருட்களுக்கு உரிய சுங்க வரி செலுத்தாத காரணத்தால் அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பாலிவுட் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது கை நிறைய, பை நிறைய பல்வேறு பொருட்களை அள்ளி வருகிறார்கள். ஆனால் அதற்குண்டான சுங்க வரியை மட்டும் மறக்காமல் செலுத்துவதில்லை.

    இதனால் சமீப காலமாக பாலிவுட் கலைஞர்களை பிடித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது சுங்கத்துறை. பிபாஷா பாசு சமீபத்தில் இதுபோல பிடிபட்டார். இந்த நிலையில் இன்று அனுஷ்கா சர்மாவைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

    டோரன்டோவில் நடந்த இஃபா விழாவுக்காக போயிருந்த அனுஷ்கா, திரும்பி வந்தபோது பல்வேறு பொருட்களுடன் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அதற்கான சுங்க வரியை அவர் செலுத்தவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர் கொண்டு வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    English summary
    Customs officials questioned Actress Anuskha Sharma at Mumbai airport. She was returning from Toronto after attending IIFA function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X