Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரித்து சோனியின் முதல் சவால்
18 வயதே ஆகும் ரித்து, உதவி இயக்குநராக மகேஷ் பட்டிடம் பணியாற்றியவர். இப்போது நடிக்க வந்துள்ளார். பட்டிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் தற்போது நடிப்பில் தனக்கு பேருதவியாக கூறுகிறார் சிம்ப்ளி பியூட்டிஃபுல் ரித்து.
அமைதியான கண்கள், ஆர்ப்பாட்டமில்லாத அழகுடன் அருமையாக இருக்கும் ரித்து, விலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால் இவர் நடித்த முதல் படம் இந்தியில் வெளியான ஜாஷன்.
விலை படத்தின் நாயகனாக நடிப்பவர் பரணி. இவர் நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் நண்பராக வந்து அசத்தியவர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை ரித்து, மாறாக, தங்கச்சியாக வருகிறார்.
விலை படத்தின் கதை குறித்து ரித்து கூறுகையில், பரணி எனது அண்ணனாக வருகிறார். திடீரென நான் காணாமல் போய் விடுகிறேன். பரணி என்னைத் தேட ஆரம்பிக்கிறார். ஆனால் நான் கிடைக்கவில்லை. என்னைத் தேடும் வேட்டையின்போது, ஆள் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் எனது அண்ணனுக்குக் கிடைக்கிறது. அதன் பின்னர் நடப்பதை இப்போது நான் சொல்ல முடியாது.
மிகவும் சவாலான கேரக்டர் எனக்கு. அழகான கேரக்டர், சிறப்பாக செய்திருப்பதாக கருதுகிறேன் என்கிறார் ரித்து.
தமிழ் சுத்தமாக வரவில்லை ரித்துவுக்கு. அதை அவரே ஒத்துக் கொள்கிறார். நிச்சயம், எனக்கு தமிழ் பரிச்சயமில்லாத மொழி. வசனம் பேச சிரமப்பட்டேன். முடிந்தவரை முயற்சித்தேன். விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன் என்று அழகான ஆங்கிலத்தில் கூறுகிறார்.
'தமில் என்க்கு குஞ்சம் குஞ்சம் தெர்யும்' என்று கூறாமல் உண்மையாக பேசும் ரித்து பாராட்டப்பட வேண்டியவர்தான்.