Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாளு அவுட்; நமீ இன்!
இன்னொரு பக்கம், நடிக்க பணம் வாங்கிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்ததற்காக மாளவிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வீரா கூறியதாவது:
எங்கள் படத் தயாரிப்பாளர் மீது மாளவிகா கூறியவை பொய்க் குற்றச்சாட்டுகள் என்பதை நடிகர் சங்கம் புரிந்து கொண்டுள்ளது.
நேற்று நடிகர் சங்கத்தினர் மும்பையிலிருக்கும் மாளவிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன் கணவர் ஓய்வு எடுக்கச் சொல்லி இருப்பதால் இனி படங்களில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் மாளவிகா.
இத்தனைக்கும் அவர் 15 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டிய பகுதிகளை பத்தே நாட்களில் முடித்துக் கொடுப்பதாகக் கூறியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்காக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், ராதாரவியுமே முன்னின்று பேசினர்.
ஆனால் கணவர் தன்னை ஓய்வெடுக்கச் சொல்வதால் நடிக்க முடியாது என கூறிவிட்டார் மாளவிகா.
இனி வேறு வழியில்லை என்பதால், அவருக்குப் பதில் நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மாளவிகா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் உறுதியளித்துள்ளது.
அவர் நடிக்காமல் போனதால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ.75 லட்சத்தை அவர் உடனடியாகத் தர வேண்டும். இல்லையேல் வழக்கு தொடருவோம். அதேபோல அவருக்கு வழங்கப்பட்ட சம்பளப் பணத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூர விரும்புகிறேன். ஷாலினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் அவர் ஒப்புக் கொண்ட படங்களுக்கான கமிட்மெண்டுகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு வருமாறு கூறி, அவர் வரும்வரை காத்திருந்தார் அஜீத். இன்றைய இளம் நடிகர் நடிகைகள் அவரை உதாரணமாகப் பின்பற்ற வேண்டும்.
மாளவிகாவுக்குத் தடை!:
இதுவரை நடிகை மாளவிகா 17 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது அதை வெட்டி வீசிவிட்டு நமீதாவை வைத்துப் புதிதாக எடுக்கிறேன். மாளவிகாவை விட நமீதா எவ்வளவோ மேல்.
அவர் நடிக்க ஒப்புக் கொண்டது எங்கள் படத்துக்கே புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிட்டது, என்றார் வீரா.
நடிகர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காததால் இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாளவிகாவுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்தத் தடைக்காக மாளவிகா நிச்சயம் வருத்தப்பட மாட்டார். காரணம் அவர் குழந்தைப் பெற்று, பழையபடி குத்தாட்டத்துக்குத் திரும்ப குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும். நடிகர் சங்கத் தடை அது வரையா நீடிக்கும்?