Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மாளு அவுட்; நமீ இன்!
இன்னொரு பக்கம், நடிக்க பணம் வாங்கிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்ததற்காக மாளவிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வீரா கூறியதாவது:
எங்கள் படத் தயாரிப்பாளர் மீது மாளவிகா கூறியவை பொய்க் குற்றச்சாட்டுகள் என்பதை நடிகர் சங்கம் புரிந்து கொண்டுள்ளது.
நேற்று நடிகர் சங்கத்தினர் மும்பையிலிருக்கும் மாளவிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன் கணவர் ஓய்வு எடுக்கச் சொல்லி இருப்பதால் இனி படங்களில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் மாளவிகா.
இத்தனைக்கும் அவர் 15 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டிய பகுதிகளை பத்தே நாட்களில் முடித்துக் கொடுப்பதாகக் கூறியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்காக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், ராதாரவியுமே முன்னின்று பேசினர்.
ஆனால் கணவர் தன்னை ஓய்வெடுக்கச் சொல்வதால் நடிக்க முடியாது என கூறிவிட்டார் மாளவிகா.
இனி வேறு வழியில்லை என்பதால், அவருக்குப் பதில் நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மாளவிகா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் உறுதியளித்துள்ளது.
அவர் நடிக்காமல் போனதால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ.75 லட்சத்தை அவர் உடனடியாகத் தர வேண்டும். இல்லையேல் வழக்கு தொடருவோம். அதேபோல அவருக்கு வழங்கப்பட்ட சம்பளப் பணத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூர விரும்புகிறேன். ஷாலினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் அவர் ஒப்புக் கொண்ட படங்களுக்கான கமிட்மெண்டுகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு வருமாறு கூறி, அவர் வரும்வரை காத்திருந்தார் அஜீத். இன்றைய இளம் நடிகர் நடிகைகள் அவரை உதாரணமாகப் பின்பற்ற வேண்டும்.
மாளவிகாவுக்குத் தடை!:
இதுவரை நடிகை மாளவிகா 17 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது அதை வெட்டி வீசிவிட்டு நமீதாவை வைத்துப் புதிதாக எடுக்கிறேன். மாளவிகாவை விட நமீதா எவ்வளவோ மேல்.
அவர் நடிக்க ஒப்புக் கொண்டது எங்கள் படத்துக்கே புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிட்டது, என்றார் வீரா.
நடிகர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காததால் இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாளவிகாவுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்தத் தடைக்காக மாளவிகா நிச்சயம் வருத்தப்பட மாட்டார். காரணம் அவர் குழந்தைப் பெற்று, பழையபடி குத்தாட்டத்துக்குத் திரும்ப குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும். நடிகர் சங்கத் தடை அது வரையா நீடிக்கும்?