Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்கு: சைபர் கிரைம் போலீசில் நயன்தாரா புகார்!
டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். அடையாளம் தெரியாத சிலர், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.
அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட டேம் 999' படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.
இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார்.
ஆனால் அப்படியும் அவர் பெயரில் அந்த தளங்களில் பக்கங்கள் தொடர்ந்து இயங்கின.
இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார்.