Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனிமேல் இறப்பது போல நடிக்க மாட்டேன் - திரிஷா உறுதி
சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம்.
இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் திரிஷா.
இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்றாலே காதல், கல்யாணம், விவாகரத்து, அம்மா வேஷம், வேலைக்கு செல்வது, சாவது என்று எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டி வரும். முதல் முறையாக பீமா படத்தில் சாவது போல நடித்திருந்தேன். படத்துக்கு அது தேவையாக இருந்தது.
ஆனால் அந்த காட்சியை பார்த்த என்னுடைய அம்மா அழுதுவிட்டார். இனி அதுபோல நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். என்னுடைய நெருங்கிய தோழிகளும் அப்படி நடிக்க வேண்டாம், மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறிவிட்டனர். எனவே இனி சாவது போல நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா.