Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜ் தாக்கரேவை விட நல்ல 'சொல்யூஷன்' என்னிடம் இருக்கு-ராக்கி
ஐட்டம் கேர்ள், செக்ஸி நடிகை, பெரிய வாய்க்காரர் என பல பட்டப் பெயர்களால் அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். இவர் புதிதாக ராக்கி கா இன்சாப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தப் போகிறார். ராக்கியின் சுயம்வரம் நடந்த என்டிடிவி இமேஜின் டிவியில்தான் இதுவும் நடக்கப் போகிறது.
இதுகுறித்து ராக்கி கூறுகையில்,
மும்பையில் அதிகரித்து வரும் வெளியூர்க்காரர்களின் பிரச்சினை குறித்து இப்போது பரபரப்பாக பேசுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு நண்பர் ராஜ் தாக்கரே சொல்வதை விட சிறப்பான தீர்வு என்னிடம் உள்ளது. அதை எனது நிகழ்ச்சியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எனது புதிய ரியாலிட்டி ஷோ, பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பிளாட்பாரமாக அமையும். மும்பையின் பிரச்சினைக்காக நான் பலமுறை குரல் கொடுத்துள்ளேன்.அடிப்படையில் நான் ஒரு மகாராஷ்டிரப் பெண். எனவே எனக்கும் இந்தப் பிரச்சினைகள் குறித்துத்தெரியும்.
நமது சமூகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். சாலைப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நான் மும்பை மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளேன்.
என்னால் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவை மீடியாவுக்கு நன்றாக தெரியும். அவற்றை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால்தீர்க்க முயற்சிப்போம்.
அதற்காக நான் ராஜ் தாக்கரே போல சிந்திக்க மாட்டேன். உ.பியிலிருந்தும் சரி, பீகாரிலிருந்தும் சரி யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். யாராக இருந்தாலும் அவர்கள் வெளிமாநிலத்தவர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நாடும், இந்த மாநிலமும் கடவுளால் கொடுக்கப்பட்டவை. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்வாழலாம். காரணம், நாம்அனைவருமே கடவுளின் குழந்தைகள்தான்.
இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர் என பாகுபாடு பார்க்க எனக்குப் பிடிக்காது. மும்பை அனைவருக்கும் சொந்தமானது. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சம்பாதிக்கலாம், வாழலாம். இதில் என்ன தவறு என்றார் ராக்கி.
அப்ப, 'தாக்கரே அன் கோ'வின் அடுத்த அட்டாக், ராக்கியா?