திருப்பி அனுப்பும் ரோஜா!

தமிழ், தெலுங்குத் திரையுலகை ஒரே நேரத்தில் கலக்கியவர் ரோஜா. 100 படங்களில் நாயகியாக நடித்து சாதனை படைத்தவர். இதனால் விழாவும் கண்டவர்.
காலப் போக்கில் ரோஜா நடிப்பிலிருந்து மெல்ல விலகி அரசியலில் புகுந்தார். ஆந்திர மாநில தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக இப்போது ஆந்திர அரசியலைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா. சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே. வேண்டிக் கேட்டுக் கொண்டார் என்பதற்காக (இவர் ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணியின் நண்பர் என்பதால்) அவரது எல்லாம் அவன் செயல் படத்தில் மட்டும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் ஆந்திர தேர்தல் களத்தை ரோஜாவின் பிரசாரம் சூடாக்க உள்ளதாம்.
சிரஞ்சீவியின் வருகையால் தெலுங்கு தேசம் சற்றே ஆடிப் போயுள்ளதால், ரோஜாவின் பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு அதிகம் நம்பியுள்ளாராம்.
இதனால் இப்போதே மக்கள் மத்தியில் பிரசாரத்தைத் தொடங்குமாறு அவருக்கு உத்தரவு போயுள்ளதாம். ஏற்கனவே தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடையே பாப்புலராகியுள்ள ரோஜாவும், தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்.
இதனால் தேர்தல் முடியும் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.
சமீபத்தில் ரோஜாவை அணுகிய சில தயாரிப்பாளர்களிடம், தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











