Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'மூன்றாம் விதி' ஷயாலி!
எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு முறை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் நியூட்டனின் மூன்றாம் விதி. தாய் முத்துச் செல்வன் இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வித்தியாசமான வேடம். படம் பிரமாதமாக வரும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
சூர்யாவுக்கு இதில் ஜோடியாக வருபவர்தான் ஷயாலி பகத். இந்தியில் வெளியான தி டிரெய்ன் படத்தில் பிரமிக்க வைத்தவர்தான் ஷாயாலி. இந்தப் படம் வேறு எதுவும் அல்ல, தமிழில் சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான கெளதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் ரீமேக்தான்.
தற்போது தெலுங்கில் படு பிசியாக வலம் வருகிறார். இப்போது தமிழுக்கும் வந்துள்ளார். தமிழுக்கு வந்திருப்பது ஷயாலிக்கு பெரும் சந்தோஷமாக உள்ளதாம். ஏற்கனவே என்னைத் தேடி சில தமிழப் பட வாய்ப்புகள் வந்தன.
ஆனால் அவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை அப்போது. ஆனால் இப்போது என்னைத் தேடி வந்த நியூட்டனின் மூன்றாவது விதி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. எனவே கப்பென்று பற்றிக் கொண்டு விட்டேன் என்கிறார்.
தமிழ் சினிமாவில் நுழைந்துள்ள இந்த மும்பை ஷயாலி, எத்தனை பேரை கலங்கடிக்கப் போகிறாரோ?