twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடிப்பதை ஆதரித்தேனா? - ஸ்ரேயா விளக்கம்

    By Shankar
    |

    Shriya
    தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.

    இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்.

    மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.

    18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.

    ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார்.

    "மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?", என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.

    English summary
    Actress Shriya denied reports with her comments against the Maharashtra govt's new rule which preventing youngsters below 25 years taking alcohol.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X