Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தோல்வி ஏன்..? ஆராயும் ஸ்ரேயா!!
ரஜினியுடன் நடித்த சிவாஜி என்ற ஒரே வெற்றிப் படம்தான் இதுவரை ஸ்ரேயாவை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டி வருகிறது. சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு எந்தப் படமும் அமையவில்லை.
இந்த ஆண்டு வெளியான குட்டி, சிக்குபுக்கு போன்ற படங்களும் கூட ஓடவில்லை.
இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவு, ஏன் இந்தத் தோல்வி என்ற சுய பரிசோதனையில் அவரை இறங்க வைத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "தமிழ், தெலுங்கில் நான் நடித்த சில படங்கள் நன்றாக ஓடவில்லை. ஒருவிதத்தில் நானும்கூட இதற்குக் காரணம். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நான் நடிக்காததே இதற்கு காரணம். படங்கள் வெற்றி பெற நல்ல கதைகள் அமையவேண்டும், அப்படி கதைகள் எனக்கு வராமல் போய்விட்டது. நானும் இதில் பிடிவாதம் காட்டவில்லை.
தமிழ் படங்களில் நடிப்பது பெரிய சவாலாக உள்ளது. ஆங்கில ப்படத்தில் நடித்து இருக்கிறேன். சல்மான் ருஷ்டி நாவலை மையமாக வைத்து தயாராகும் இன்னொரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறேன். ஜீவாவுடன் ரவுத்திரம் படத்திலும் நடிக்கிறேன். இவை எனக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமையும் என நம்புகிறேன்..", என்றார்.