'அன்னபூரணி'யை நம்பும் பாவனா!

By Staff

Bhavana
ஜெயம்கொண்டான் படத்தில் நான் ஏற்று நடித்துள்ள அன்னபூரணி கேரக்டர் தமிழில் எனது கேரியரை தூக்கி நிறுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தெற்றுப் பல் அழகி பாவனா.

பாவனாவை பெரிய திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம்கொண்டான் மூலம் ரசிகர்களை கலகலக்க வருகிறார் பாவனா.

உன்னாலே உன்னாலே புகழ் வினய்யுடன் இணைந்து இப்படத்தில் கலக்கியுள்ளார் பாவனா. கூடவே லேகா வாஷிங்டனும் இருக்கிறார்.

இப்படத்தில் பாவனாவுக்கு கிராமத்து பெண் வேடமாம். அதேசமயம் வாலிபால் சாம்பியனாகவும் நடித்துள்ளாராம். படத்தில் பாவனாவின் பெயர் அன்னபூரணி.

இந்தக் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ரசித்து செய்துள்ளேன். இப்படத்தில் நான் புத்தம் புதுப் பொலிவுடன் காணப்படுவேன். இதற்கு முக்கிய காரணம் எனது டிசைனர்தான். என்னைப் புத்தம் புதிய பெண்ணாக இதில் அவர் காட்டியுள்ளார்.

இப்படம் வந்த பின்னர் என்னை எல்லோரும் அன்னபூரணி என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்களும் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கைச் சிரிப்புடன்.

இப்படத்தின் மூலம் தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும், கேரியர் நிலை பெறும் என்ற நம்பிக்கையுடனும் பாவனா உள்ளாராம். இப்போதைக்கு பாவனா கையில் தமிழ்ப் படம் ஏதும் இல்லை. தற்போது அவர் மலையாளம், தெலுங்கில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் கொண்டானுக்குப் பிறகு தமிழிலும் தீவிரம் காட்டுவாராம்.

ஜெயம் கொண்டான் மேவ ஜெயதே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X