Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
'அன்னபூரணி'யை நம்பும் பாவனா!
பாவனாவை பெரிய திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம்கொண்டான் மூலம் ரசிகர்களை கலகலக்க வருகிறார் பாவனா.
உன்னாலே உன்னாலே புகழ் வினய்யுடன் இணைந்து இப்படத்தில் கலக்கியுள்ளார் பாவனா. கூடவே லேகா வாஷிங்டனும் இருக்கிறார்.
இப்படத்தில் பாவனாவுக்கு கிராமத்து பெண் வேடமாம். அதேசமயம் வாலிபால் சாம்பியனாகவும் நடித்துள்ளாராம். படத்தில் பாவனாவின் பெயர் அன்னபூரணி.
இந்தக் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ரசித்து செய்துள்ளேன். இப்படத்தில் நான் புத்தம் புதுப் பொலிவுடன் காணப்படுவேன். இதற்கு முக்கிய காரணம் எனது டிசைனர்தான். என்னைப் புத்தம் புதிய பெண்ணாக இதில் அவர் காட்டியுள்ளார்.
இப்படம் வந்த பின்னர் என்னை எல்லோரும் அன்னபூரணி என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்களும் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கைச் சிரிப்புடன்.
இப்படத்தின் மூலம் தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும், கேரியர் நிலை பெறும் என்ற நம்பிக்கையுடனும் பாவனா உள்ளாராம். இப்போதைக்கு பாவனா கையில் தமிழ்ப் படம் ஏதும் இல்லை. தற்போது அவர் மலையாளம், தெலுங்கில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் கொண்டானுக்குப் பிறகு தமிழிலும் தீவிரம் காட்டுவாராம்.
ஜெயம் கொண்டான் மேவ ஜெயதே!