twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனது மெழுகுச் சிலையை தானே திறந்து வைத்த அழகுச் சிலை கரீனா!

    By Siva
    |

    பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது மெழுகுச் சிலையை இங்கலாந்தின் பிளாக்பூலில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார்.

    மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை கரீனா தன் கையாலே திறந்து வைத்து, அந்த சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    இது குறித்து கரீனா கூறியதாவது,

    மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச் சிலை உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த சிலை அப்படியே என்னைப் போன்று உள்ளது. அவர்கள் மிகவும் அழகாக செய்துள்ளனர். நான் எது, சிலை எது என்று சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    ரூ.1,1, 896, 956 செலவு செய்து கரீனாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்த சிலையை செய்து முடிக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது.

    அங்கு ஏற்கனவே ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கரீனா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகள் உலகில் உள்ள 6 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

    அழகுச் சிலை தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளது...

    English summary
    Bollywood actress Kareena Kapoor has unveiled her wax statue in the world famous Madame Tussauds museum in Blackpool, Britain. Kareena's statue costs 15,000 pounds and took 4 months to complete it. Shah Rukh Khan, Hrithik Roshan, Amitabh Bachchan and Aishwarya Rai's wax statues are also there in Tussauds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X