Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனது மெழுகுச் சிலையை தானே திறந்து வைத்த அழகுச் சிலை கரீனா!
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை கரீனா தன் கையாலே திறந்து வைத்து, அந்த சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து கரீனா கூறியதாவது,
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச் சிலை உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த சிலை அப்படியே என்னைப் போன்று உள்ளது. அவர்கள் மிகவும் அழகாக செய்துள்ளனர். நான் எது, சிலை எது என்று சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ரூ.1,1, 896, 956 செலவு செய்து கரீனாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்த சிலையை செய்து முடிக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது.
அங்கு ஏற்கனவே ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகள் உலகில் உள்ள 6 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
அழகுச் சிலை தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளது...