Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'ராமர்' படத்தைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா படத்தில் நயனதாரா?
ராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்த நயனதாரா மீண்டும் ஒரு புராணப் படத்தில் நடிக்கப் போவதாக தெலுங்கு தேசத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயனதாராவைக் கல்யாணம் செய்வதற்காக காத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த நிலையில் நயனதாரா நடித்த கடைசிப் படம் என்ற தகவலோடு அவர் தெலுங்கில் நடித்த ராம ராஜ்ஜியம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு நயனதாரா நடிக்க மாட்டார். பிரபுதேவாவை மணந்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மேலும் ஒரு புராணப் படத்தில் நயனதாரா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் ராவணன் கதை குறித்த படம் இது என்று கூறப்படுகிறது. நாகார்ஜூனாவை ராவணனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்திலும் நயனதாராவையே சீதையாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரை அணுகியுள்ளாராம். இதுகுறித்து நயனதாராவும் சிந்தித்து வருவதாக தெரிகிறது.
ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராம்கோபால் வர்மா இயக்குகிறார். ராவணன் வேடத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்ஜியம் படம் வெற்றிகரமாக ஓடுவதால் ராவணன் பற்றி புராணபடத்தை எடுக்க முன் வந்துள்ளனர்.
இதில் நடிக்குமாறு கேட்டு நயன்தாராவை அணுகியுள்ளனர். இந்த படத்தில் நடித்த பிறகு திருமணத்தை நடத்தி கொள்ளலாமா? என்ற யோசனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
ராவணன் படத்தோடு தனது திரையுலக வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது.
'அவர்' என்ன சொல்வார் என்று தெரியவில்லை!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!