Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ரம்பா வீட்டை சூறையாடிய தனியார் செக்யூரிட்டிகள்!
நடிகை ரம்யா வீடு சாலி கிராமம் நவநீதம்மாள் தெருவில் உள்ளது. கடந்த வாரம் ரம்பா வெளியூர் புறப்பட்டு சென்றார். வீட்டில் காவலாளி மட்டுமே இருந்தார்.
ரம்பா வீட்டுக்கு அருகில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் இரவு ரம்பா வீடு அருகில் காரை நிறுத்தி, உள்ளே இருந்தபடியே மது அருந்தியதாக தெரிகிறது.
இதை ரம்பா வீட்டு காவலாளி கண்டித்துள்ளார். வேறு எங்காவது சென்று மது அருந்தும்படி கூறினாராம். இதையடுத்து அவருக்கும், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு மீண்டும் ரம்பா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ரம்பா வீட்டு காவலாளியை தரக்குறைவாக திட்டி தகராறில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் ரம்பா வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தனர். முன் அறையிலிருந்த டியூப் லைட்டை அடித்து சூறையாடிய அவர்கள், கைவசம் தயாராக கொண்டு வந்திருந்த ஒரு டியூப்லைட்டை மற்றொரு அறைக்குள் தூக்கி வீசினார்கள். கற்களையும் எறிந்து தாக்கினார்கள். பிறகு தப்பி ஓடிவிட்டனர்.
ரம்பா வீட்டு காவலாளி இதுபற்றி இன்று விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், ரம்பா வீட்டில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிவது தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.