Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரம்பா வீட்டை சூறையாடிய தனியார் செக்யூரிட்டிகள்!
நடிகை ரம்யா வீடு சாலி கிராமம் நவநீதம்மாள் தெருவில் உள்ளது. கடந்த வாரம் ரம்பா வெளியூர் புறப்பட்டு சென்றார். வீட்டில் காவலாளி மட்டுமே இருந்தார்.
ரம்பா வீட்டுக்கு அருகில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் இரவு ரம்பா வீடு அருகில் காரை நிறுத்தி, உள்ளே இருந்தபடியே மது அருந்தியதாக தெரிகிறது.
இதை ரம்பா வீட்டு காவலாளி கண்டித்துள்ளார். வேறு எங்காவது சென்று மது அருந்தும்படி கூறினாராம். இதையடுத்து அவருக்கும், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு மீண்டும் ரம்பா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ரம்பா வீட்டு காவலாளியை தரக்குறைவாக திட்டி தகராறில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் ரம்பா வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தனர். முன் அறையிலிருந்த டியூப் லைட்டை அடித்து சூறையாடிய அவர்கள், கைவசம் தயாராக கொண்டு வந்திருந்த ஒரு டியூப்லைட்டை மற்றொரு அறைக்குள் தூக்கி வீசினார்கள். கற்களையும் எறிந்து தாக்கினார்கள். பிறகு தப்பி ஓடிவிட்டனர்.
ரம்பா வீட்டு காவலாளி இதுபற்றி இன்று விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், ரம்பா வீட்டில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிவது தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.