அனுமதி பெறாமல் பேசிய குஷ்பு-வழக்கு-8 வாகனங்கள் பறிமுதல்

கடந்த சனிக்கிழமை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இதில் பழனிச்செட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுள்ளது. அதனால் அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications











