Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'புலி'யில் ஸ்ரேயாவின் ஐட்டம் டான்ஸ்!
முன்பு கேரியரின் உச்சத்தில் இருந்தபோது, வடிவேலுவின் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார் ஸ்ரேயா. இதனால் கடுப்பான அஜீத், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார்.
காமெடியனுடன் ஒற்றைப் பாடலுக்கு ஆடும் நடிகையை என் படத்தில் போட மாட்டேன் என வெளிப்படையாகக் கூறிவிட்டு நயனுடன் ஜோடி போட்டார்.
அதன்பிறகு அவருக்கு வரவிருந்த சில நல்ல வாய்ப்புகளும் கூட நழுவிப் போனது தெரிந்திருக்கும்.
இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸுக்கு ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ரேயா. அது பவன் கல்யாண் நடிக்க, எஸ் ஜே சூர்யா இயக்கும் புலி. இப்போது தெலுங்கில் தயாராகிவரும் புலி படம், தமிழில் எஸ்ஜே சூர்யா நடிக்க வெளியாகிறது.
இந்த இரு படங்களிலுமே ஸ்ரேயாதான் குத்தாட்டம் போடுகிறார், ஒரு பாடலுக்கு.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "ஐட்டம் டான்ஸ் என்பது ஏதோ செய்யக்கூடாத தப்பு மாதிரி எல்லோரும் பார்க்கிறார்கள். எனக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. நடிக்க வந்த பிறகு நாயகியாக இருந்தால் என்ன, ஐட்டம் பாட்டுக்கு ஆடினால் என்ன... எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, எஸ் ஜே சூர்யா - பவன் கல்யாண்- ஏ ஆர் ரஹ்மான் என ஜாம்பவான்கள் இணைந்துள்ள படம். இதில் ஒரு பாட்டுக்கு தோன்றுவதே கூட பெரிய விஷயம்தான். இந்தப் பாட்டுக்கு நடனம் அமைத்திருப்பவர் என்னுடைய ஃபேவரிட் பிருந்தா மாஸ்டர்... மிகவும் சந்தோஷமாக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன்" என்கிறார்.