Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஜக்குபாய்'-தவிர்த்த ஸ்ரேயா!
சிவாஜி படத்தின் 200வது நாள் விழாவின்போது படத்தின் நாயகி ஸ்ரேயா மகா குறைச்சலான ஆடையுடன் தோன்றி, விழாவின் சிறப்பு விருந்தினர் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை அதிர வைத்ததும், அந்த விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்து அதனால் ஸ்ரேயாவுக்கு பிரச்சினைகள் வந்ததும் நினைவிருக்கலாம்.
மீண்டும் கருணாநிதி பங்கேற்கும் விழாவொன்றில் ஸ்ரேயாவும் கலந்து கொள்ளும் சூழ்நிலை. சரத்குமார் நடித்துள்ள ஜக்குபாய் பாடல்கள் வெளியீட்டு விழாதான் அது. இந்த முறை அப்படி எந்த வில்லங்கமும் வந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே ஸ்ரேயாவுக்கு 'ட்ரஸ் கோட்' பற்றியெல்லாம் ட்யூஷன் எடுத்தாராம்.
இதனால் சற்று அப்செட் ஆகி விட்டார் ஸ்ரேயா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரலாமா வேண்டாமா என கடைசி நிமிடம் வரை யோசித்த ஸ்ரேயா, எதற்கு வம்பு என்று வராமலேயே நின்றுவிட்டாராம்.
'போத்திகிட்டு வந்தா எனக்குப் பிரச்சினை... சுதந்திரமா வந்தா மத்தவங்களுக்குப் பிரச்சினை... இதைவிட போகாம விட்டுட்டா எந்தப் பிரச்சினையும் இல்லையே', என தனது மேனேஜரிடம் சொன்னாராம் ஸ்ரேயா.
நேற்றைய விழாவில், ஒரு பக்கம் ராதிகா, மறுபக்கம் அவர் கணவர் சரத்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் என்று மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
பாடல்களை முதல்வர் வெளியிட ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.