Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'ஜக்குபாய்'-தவிர்த்த ஸ்ரேயா!
சிவாஜி படத்தின் 200வது நாள் விழாவின்போது படத்தின் நாயகி ஸ்ரேயா மகா குறைச்சலான ஆடையுடன் தோன்றி, விழாவின் சிறப்பு விருந்தினர் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை அதிர வைத்ததும், அந்த விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்து அதனால் ஸ்ரேயாவுக்கு பிரச்சினைகள் வந்ததும் நினைவிருக்கலாம்.
மீண்டும் கருணாநிதி பங்கேற்கும் விழாவொன்றில் ஸ்ரேயாவும் கலந்து கொள்ளும் சூழ்நிலை. சரத்குமார் நடித்துள்ள ஜக்குபாய் பாடல்கள் வெளியீட்டு விழாதான் அது. இந்த முறை அப்படி எந்த வில்லங்கமும் வந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே ஸ்ரேயாவுக்கு 'ட்ரஸ் கோட்' பற்றியெல்லாம் ட்யூஷன் எடுத்தாராம்.
இதனால் சற்று அப்செட் ஆகி விட்டார் ஸ்ரேயா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரலாமா வேண்டாமா என கடைசி நிமிடம் வரை யோசித்த ஸ்ரேயா, எதற்கு வம்பு என்று வராமலேயே நின்றுவிட்டாராம்.
'போத்திகிட்டு வந்தா எனக்குப் பிரச்சினை... சுதந்திரமா வந்தா மத்தவங்களுக்குப் பிரச்சினை... இதைவிட போகாம விட்டுட்டா எந்தப் பிரச்சினையும் இல்லையே', என தனது மேனேஜரிடம் சொன்னாராம் ஸ்ரேயா.
நேற்றைய விழாவில், ஒரு பக்கம் ராதிகா, மறுபக்கம் அவர் கணவர் சரத்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் என்று மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
பாடல்களை முதல்வர் வெளியிட ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.