Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தம்பி மனைவி கொடுத்த வரதட்சணைக் கொடுமைப் புகார்-கைதாகிறார் நடிகை ஆம்னி
விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் படத்தில் கவர்ச்சிகரமாக நடித்தவர் ஆம்னி. கமல்ஹாசனுடன் பாசவலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.
இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர்.
சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ். கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்.
இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்.