பிபாஷா பாசுவிடம் செக்ஸ் சில்மிஷம்

துர்கா பூஜை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பிபாஷா பாசு ஆர்வமாக இருந்தார்.
வடக்கு மும்பையில் சான்டாகுரூஸில் நடந்த துர்கா பூஜையில் தனது காதலர் ஜான் ஆப்ரகாமுடன் கலந்து கொண்டார் பிபாஷா.
மேடைக்கு அருகில் அவர் நின்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு ரசிகர், பிபாஷாவை நெருங்கி அவரது மார்பைப் பிடித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த பிபாஷா, அதிலிருந்து மீளுவதற்குள்ளாகவே அந்த நபர் கூட்டத்தைப் பயன்படுத்தி தப்பி ஓடி விட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிபாஷா, கொதிப்படைந்தார். போலீஸில் புகார் கொடுக்கப் போவதாக ஆவேசமாக கூறினார். ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பிரச்சினை வேண்டாம் என்று கருதிய ஜான் ஆப்ரகாம், பிபாஷாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார்.
Comments


Click it and Unblock the Notifications