Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சேரனுக்கு கோபிகா நோ..நோ!
ஆட்டோகிராப் மூலம் ஹீரோவா அவதாரம் எடுத்தவர் சேரன். அதில் அவரது நடிப்பு மட்டுமன்றி கதையும், கோபிகா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் சேரன். இதில் ஸ்னேகா, மல்லிகா ஆகியோர் கேரக்டர்களில் அவர்களே நடிக்கவுள்ளனர். ஆனால் கோபிகாதான், 2ம் பாகத்தில்நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.
கல்யாணமாகப் போவதை காரணம் காட்டி நடிக்க மறுத்து விட்டாராம் கோபிகா. பலமுறை சேரன் கோரியும் கூட கோபிகா தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம்.
இதையடுத்து தற்போது உதயதாராவை அணுகியுள்ளாராம் சேரன். கோபிகாவைப் போலவே முகவாகு உதயதாராவுக்கு. எனவேதான் அவரை தேர்வு செய்துள்ளாராம் சேரன்.
உதயதாரா தரப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லையாம். ஆனால் நெகட்டிவ் சிக்னல் எதுவும் இதுவரை வராததால், கண்டிப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையில் சேரன் உள்ளார்.
2ம் பாகத்தின் கதை ரெடியாகி விட்டதாம். உதயதாராவும் ஒப்புக் கொண்டு விட்டால் ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம் சேரன்.