'டாப் கியரில்' கார்த்திகா!

தூத்துக்குடியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கார்த்திகா. பெரிய ரேஞ்சுக்கு நடிக்காவிட்டாலும் கூட அவரது முகராசிக்காகவே நிறையப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ராமன் தேடிய சீதை படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர். பாலா நடிக்கக் கூப்பிட்டு டெஸ்ட் பார்த்தார் என்ற ஒரே காரணத்தால் கோலிவுட்டில் கார்த்திகாவின் நடிப்பு மீது நல்ல அபிப்பிராயம் வந்தது நிறைய பேருக்கு.
இப்போது கார்த்திகா படு பிசியாக இருக்கிறார். காரணம், கை நிறையப் படங்களாம்.
ஐவர் பட்டாளம், தைரியம், அலையோடு விளையாடு, மதுரை சம்பவம், வைதேகி, 365 காதல் கடிதங்கள் கார்த்திகாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.
அத்தோடு இப்போது புதிய பெருமையும் இவருக்கு சேர்ந்துள்ளது. அது கலைஞர் கதை,வசனத்தில் உருவாகும் நீயின்றி நான் இல்லை படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்திகா. அதுவும் போலீஸ் வேடத்தில் வரப் போகிறாராம்.
இப்படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின் என்றாலும் கூட கார்த்திகாவுக்கும் நடிப்பதற்கேற்ற நல்ல ரோலாம். அதுவும் கலைஞரின் வசனத்தைப் பேசி நடிக்கப் போவதால் படு புல்லரிப்பாக காணப்படுகிறாராம்.


Click it and Unblock the Notifications











