Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாக். படத்தில் நந்திதா தாஸ்!
இந்தி, பெங்காலி, தமிழ், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் முதல் முறைாக கரை தாண்டி பாகிஸ்தான் படத்தில் நடிக்கப் போகிறார்.
மெஹ்ரீன் ஜாபர் இயக்கும் இப்படத்தில் நந்திதா தாஸ் இந்து தலித் பெண்ணாக வருகிறார். 7 வயது குழந்தையின் தாயார் கேரக்டர் நந்திதாவுக்கு.
இந்தக் கதை பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. சம்பா என்ற பெயரில் வரும் நந்திதா தாஸ், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் கிராமங்களில் வசிக்க நேரிடுகிறது. அவரது மகனும், கணவரும் கட்ச்சில் உள்ள சிறையில் அடைபட நேரிடுகிறது.
தலித் பெண்கள் படும் அவதியை இப்படத்தில் சித்தரித்துள்ளாராம் மெஹ்ரீன். இப்படத்தில் நடிப்பது குறித்து நந்திதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மெஹ்ரீன் பாகிஸ்தானின் சிறந்த பெண் இயக்குநர்களில் ஒருவர். அவர் சொன்ன கதை மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால்தான் நடிக்க உடனே ஒத்துக் கொண்டேன். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் நந்திதா.