Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'பஞ்சாமிர்தம்' சரண்யா!
யாரடி நீ மோகினியில் நயனதாராவின் தங்கையாக நடித்தவர்தான் சரண்யா மோகன். இவரும் கேரளாதான். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்திழுத்தார் சரண்யா. குறிப்பாக பாலக்காட்டு பக்கத்திலே பாட்டில் இவரது நளினமும், நடனமும், நவரசமும் ரசிகர்களை ஈர்த்தது.
யாரடி நீ மோகினி கொடுத்த பூஸ்ட்டால் இப்போது சரண்யா தனி நாயகியாகிவிட்டார். பஞ்சாமிர்தம் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் சரண்யா மோகன். இதுதவிர வெண்ணிலா கபடி குழு, மகேஷ், சரண்யா மற்றும் பலர், ஜெயம்கொண்டான் படங்களிலும் சரண்யா இடம் பெற்றிருக்கிறார்.
இருப்பினும் பஞ்சாமிர்தத்தில் மட்டுமே இவர் தனி ஹீரோயின். சமீபத்தில் ஈரம் என்ற படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
பஞ்சாமிர்தம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. இதையடுத்து ஊட்டியிலிருந்து ஜில்லென்று சென்னைக்குத் திரும்பியுள்ள சரண்யா, தனது முதல் ஹீரோயின் அனுபவம் சூப்பராக இருப்பதாக கூறுகிறார்.
இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தனி நாயகியாக நடிப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பு, மரியாதையை விட இப்போது சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. என்னதான் நடித்தாலும் ஹீரோயினாக நடிக்கும் சுகமே அலாதிதான் என்கிறார் கேரளத்து வசீகரப் புன்னகையுடன்.